ராஜஸ்தானை சேர்ந்த தந்தை - மகன் தூக்கிட்டு தற்கொலை

x

சென்னை அடுத்த பாடியநல்லூரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்த இராஜஸ்தானை சேர்ந்த நபர், நேற்று இரவு கடையை தூய்மை செய்வதாக மனைவியிடம் கூறி மகனையும் அழைத்து சென்றுள்ளார். காலை வரை அவர் வீடு திரும்பாததுடன், செல்போன் அழைப்பையும் எடுக்காததால், போலீசாருக்கு அவரது மனைவி தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கடையின் ஷட்டரை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, தந்தை - மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருவரது சடலங்களையும் மீட்ட போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்