காரில் கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர்.. ஸ்பாட்டில் கெத்து காட்டிய எஸ்.ஐ

x

கோவில்பட்டி பசுவந்தனையை சேர்ந்தவர் முத்துக்குமார். பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவரை, பெத்தேல் பகுதியில் வைத்து மர்மநபர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதைக்கண்ட புதூர் காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ், காரை துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இடைச்செவல் அருகே காரை வழிமறித்ததில், கார் ஓட்டுநர் தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காருக்குள் இருந்த முத்துக்குமாரை மீட்ட எஸ்.ஐ அருள் சாம்ராஜ், அவரை காருக்குள் கடத்தி வைத்திருந்த ஐயப்பன் மற்றும் செல்வக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் பாஜக கொடியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கு வழங்கப்படும் கார் பாஸ் ஒட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்