1 ஆண்டு முன் தம்பி வெட்டிக்கொலை.. பேஸ்புக் போஸ்ட் போட்ட அண்ணன் கைது

x

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில், கடந்தாண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக பிரமுகருமான பார்த்திபன் என்பவர், அதிகாலையில் நடைபயிற்சியின்போது ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவரும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், கொலை சம்பவம் நடந்து ஓராண்டான நிலையில், பார்த்திபனின் அண்ணனும், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவருமான நடராஜன், சர்ச்சைக்குரிய வகையில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், நடராஜனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்