ஆவினில் வேலை என மோசடி செய்த முன்னாள் எம்எல்ஏ? - காவல் ஆணையரிடம் புகார்

x

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த துரைராஜிடம் செந்தமிழ் குமரன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ ராமு என்பவர் தனக்கு மிகவும் நெருக்கம் எனக் கூறியும், தங்களது மகனுக்கு ஆவினில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் துரைராஜிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய துரைராஜ், கடந்த 2019ம் ஆண்டு, முன்னாள் எம்எல்ஏ ராமுவிடம், முதற்கட்டமாக மூன்று லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்று ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட துரைராஜ் புகார் அளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்