ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்ற அதிகாரி.. தீக்குளிக்க முயன்ற குடும்பம்.. ஈரோடில் பரபரப்பு சம்பவம்

x

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்கச் சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிணத்தடி என்ற இடத்தில், வருவாய்த் துறைக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தை சின்னச்சாமி மற்றும் அவருடைய உறவினரான மகாலிங்கம் குடும்பத்தினர் பயிரிட்டு வருகின்றனர். அந்த நிலத்தை மீட்க 2 மாதங்களாக முயற்சி செய்து வரும் வனத்துறையினர், ஒரு ஏக்கர் நிலத்தை 10 நாட்களுக்கு முன்பு மீட்டனர். மீதமுள்ள நிலத்தை மீட்க பொக்லைன் எந்திரத்துடன் சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்