வீடு வாடகைக்கு கேட்க வந்த பெண்..திடீரென கையில் இருந்து வந்த பொடி..அதிர்ச்சியில் ஓனர் செய்த சம்பவம்

x

வீடு வாடகைக்கு கேட்பது போல் பேச்சு கொடுத்து, நகை பறிக்க முயன்ற பெண்ணை, வீட்டு உரிமையாளர் சாதுர்யமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். ஈரோடு மூலப்பாளையம் எல்.ஐ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஸ்டெல்லா. கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வரும் ஸ்டெல்லா, மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வைத்திருந்தார். இதைப் பார்த்து வாடகைக்கு வீடு கேட்டு வந்த பேபி என்ற பெண்ணுக்கு, மேரி ஸ்டெல்லா ஒவ்வொரு அறையாக சுற்றிக் காட்டியுள்ளார். அப்போது, திடீரென மேரி ஸ்டெல்லா முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிய பேபி, கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இருந்தும் விடாப்படியாக இருந்த மேரி ஸ்டெல்லா, பேபியை அறையில் தள்ளி பூட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார், பேபியை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்