குழந்தைக்கு வாங்கிய பார்சலை பிரித்ததும் ஷாக்கான தந்தை - அடுத்து ஹோட்டல் செய்த அதிர்ச்சி சம்பவம்

x

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் தனது உறவினர் மோகன் என்பவருடன், தனது இரண்டு வயது குழந்தைக்காக சப்பாத்திகளை பார்சல் செய்து வாங்கிச் சென்றார். சப்பாத்தி பார்சலை பிரித்து சாப்பிட்ட பொழுது அது கெட்டுப் போன துர்நாற்றம் வீசி உள்ளது. இதனைத் தொடர்ந்து மோகன் என்பவர் பார்சல் வாங்கிய சப்பாத்தியுடன் அந்த தனியார் உணவகத்திற்கு வந்து முறையிட்டார். உணவகத்தின் உரிமையாளர் வெளியூர் சென்ற நிலையில் ஊழியர்கள் முறையான பதில் அளிக்காமல் உணவகத்தை மூடி விட்டுச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மோகன் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்