காம வெறி பிடித்த சைக்கோ தந்தை.. மகளை சீரழித்த கொடூரன்.. 3 பேரை தூக்கிய போலீஸ்.. ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோட்டில் 16 வயது சிறுமி தனது தாய்க்கு உதவியாக வீட்டில் இருந்து வந்து இருக்கிறார். சிறுமியின் தந்தை மது போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. மது போதையில் சிறுமியைத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் சிறுமியின் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் தாய்க்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அந்த நபரும் சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டு ஹெல்ப் லையனுக்கு புகார் அளித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை, தாய் மற்றும் தாயுடன் தகாத உறவில் இருந்தவர் என மூவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்