மக்களிடம் வசமாய் சிக்கிய தாசில்தார்... பரபரப்பு காட்சிகள் | Erode

x

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகரில் மழை நீர் ஓடையின் குறுக்கே நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்காக வடிகால்கள் அமைக்கப்பட்ட இடத்தின் ஆவணங்களை பார்வையிடுவதற்காக தாசில்தார் அங்கு சென்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள், கழிவு நீர் காரணமாக தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர். நீர்வழிப்பாதையில், பொது மக்களுக்கு பயனில்லாமல் கட்டப்படும் கழிவு நீர் நிலையத்தை அகற்ற வேண்டும் என்று தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்