"நீங்கள் இனிமே இறங்க கூடாது" உரிமையாளரை சரமாரியாக தாக்கிய தொழிலாளர்கள்.. ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோட்டில், சரக்குகளை இறக்குவதில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் நகர மேம்பாட்டிற்காக மாட்டு வண்டிகளை, மோட்டார் வாகனங்களாக மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அவ்வாறு மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், தங்கள் வாகனங்களில் உள்ள சரக்கை தாங்களே இறக்கிக் கொள்ள அனுமதிக்குமாறு, மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவ்வாறு சரக்குகளை இறக்கிய மோட்டார் வாகன உரிமையாளரிடம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்