ஈரோட்டில் இறங்கிய ரோபோ டீச்சர்.. கேட்ட கேள்விக்கு வந்த பதில்.. அசந்த மாணவர்கள்

x

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவ, மாணவியரின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த ரோபோ ஆசிரியைக்கு ஐரின் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியையை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ரோபோ ஆசிரியை சரியான பதிலை அளித்து, அனவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்