ஈரோட்டில் திடீரென அலறி அடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

பவானி அருகே கஞ்சா போதையில் பட்டா கத்தியால் தாக்க முயன்ற வடமாநில இளைஞருக்கு தர்ம அடி விழுந்தது. ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் பகுதியில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய இளைஞர் ஒருவர் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென கத்தி மற்றும் கற்களை எடுத்து தாக்க தொடங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து அவரை மடக்கி பிடித்த கத்தியை பிடுங்கியதுடன், கைகளை கட்டி தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்