ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் - ஆக்கிரமிப்பாளர் மிரட்டல்

x

ஈரோடு மாவட்டம் செங்காட்டுத் தோட்டம் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் 27.5 சென்ட் நிலவியல் ஓடை பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற முயன்ற நிலையில் ஆக்கிரமிப்பாளர் சிவப்பிரகாஷ் தனக்கு முறையான அறிவிப்பு வழங்கவில்லை தெரிவித்தார். மேலும் காம்பவுண்ட் சுவரை இடித்தால் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொள்வதாகவும், அருகில் இருந்த கிணற்றின் காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி நின்று கிணற்றில் குதிப்பதாகவும் கூறினார். இருந்த போதிலும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்