குப்பையில் மின்னிய வைரம் - உடனே தூய்மை பணியாளர் செய்த செயல்

x

ஈரோட்டில் குப்பையில் தவற விட்ட வைரக் கம்மலை மீட்டுத்தந்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது. பிரபல நகைக்கடையில் இருப்பு குறித்து ஆய்வு செய்த போது, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைரக்கம்மல் கணக்கில் வராதது தெரிய வந்தது. குப்பையில் நகையை தவறவிட்டிருக்கலாம் என கருதிய கடை உரிமையாளரின் முறையீட்டின் பேரில், வெண்டிப்பாளையம் குப்பை கிடங்கில் இருந்த குப்பைகளை சோதித்துப் பார்த்தனர். இதில், தொலைந்து போன கம்மல் கிடைத்த நிலையில், அதனை மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள் சரவணன், நாகராஜ் உள்ளிட்டோருக்கு பாராட்டு குவிகிறது.


Next Story

மேலும் செய்திகள்