ஈரோட்டில் களமிறங்கிய 10 சிறப்பு மருத்துவர்கள்.. இலவச மருத்துவ முகாமில் கலக்கும் பிரபல மருத்துவர்

x

ஜீரணக்கோளாறு, மலக்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை கிராம மக்கள் பெற வேண்டும் என பிரபல மருத்துவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல மருத்துவர் பழனிசாமி. இவர், தமது சொந்த ஊரில், ஆண்டுதோறும் ஜீரண கோளாறு குறித்த மருத்துவ முகாமை நடத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில், பிரபல தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 10 சிறப்பு மருத்தவர்கள் பங்கேற்று, 300-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, வயிறு மற்றும் ஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்