ஓடும் காரில் திடீரென கிளம்பிய புகை.. - நிறுத்திய நொடி பற்றி எரிந்த பயங்கரம்..

x

ஈரோட்டில், வில்லரசம்பட்டி சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த காரின் முன்புறத்தில் இருந்து புகை வெளியேறியது. ஹேண்ட் பிரேக் போட்டு, காரை நிறுத்திய பின், கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. கார் உரிமையாளர் சரவணன் மற்றும் இருவர் உடனே வெளியேறி உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். கேஸ் பங்க் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்