அவசரத்தால் வந்த வினை...! நேருக்கு நேர் மோதி சிதறிய பைக்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், தனது இருசக்கர வாகனத்தில் சூரம்பட்டியில் இருந்து நசியனூருக்கு சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி எதிரே தனது தாயுடன் வந்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இந்த விபத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வெற்றிச்செல்வன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தில் வந்த மணிகண்டன் அவரது தாய் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்