சிக்கிய சில்வண்டுகள்... ஓனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ஈரோடு மாவட்டம், பவானியில் 18 வயது பூர்த்தி அடையாமல் சிறார்கள் ஓட்டிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார், வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பத்துக்கு மேற்பட்ட சிறுவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சிறுவர்களின் பெற்றோரை நேரில் வரவழைத்து நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்