நிதி நிறுவன அதிபருடன் காரில் சென்ற 2 பெண்கள்...45 நிமிட போராட்டம்.. வெளிவந்த சடலங்கள்...

x

மாணிக்கப்பம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கலைச்செல்வன், 2 பெண்களுடன் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். வில்லரசம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்து, புதரில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் காரை ​மீட்டு, அதிலிருந்து 2 இளம்பெண்களின் சடலத்தையும், நிதி நிறுவன அதிபர் கலைச்செல்வனை படுகாயங்களுடன் மீட்டனர். நிதி நிறுவன அதிபர், சிகிச்சைக்காக அள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்