"ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு.." வெற்றி துரைசாமி மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல்

x

முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,கடந்த 8 நாட்களுக்கு பிறகு, சட்லஜ் நதியில் இருந்து

அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு, ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

ஒரே மகனை இழந்தது, தாங்கிக்கொள்ள முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும் என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, மகனை இழந்து வாடும் சைதை துரைசாமியின் துயரத்தில், நானும் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார். வெற்றி துரைசாமியின்

ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்