ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத‌தற்கு ஈபிஎஸ் கண்டனம்

x

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத‌தற்கு ஈபிஎஸ் கண்டனம்

#edappadipalanisamy #admk #tngovt #teacher

மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணத்தைக் கூறி, 32 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்காத‌தற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் பந்தயத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த அரசு, மாநில அரசின் நிதியில் இருந்து உடனடியாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்