``பாட்டு உன்ன இழுக்குதா?’’ - ஜாலியாக சென்ற டவுன் பஸ்.. நொடியில் அலறவிட்ட யானை

x

தாளவாடி மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. தாளவாடி கும்டாபுரம் சாலையில் சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. இதையடுத்து பேருந்தை நோக்கி யானை நகர்ந்து வந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் பேருந்தை தொடர்ந்து வந்த காட்டு யானை, பிறகு வனப்பகுதிக்குள் சென்றதால், பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்