சாலையை வழிமறித்த காட்டு யானைகள்...வாகன ஓட்டிகள் அவதி

x

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கெத்தை மலைப்பாதையில் காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால் போக்குவரத்து பாதித்தது. குட்டியுடன் யானைகள் சாலையில் வழிமறித்து நின்றதால், முன்னெச்சரிக்கையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் சாலையோரம் ஒதுங்கியதை அடுத்து வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


Next Story

மேலும் செய்திகள்