"இந்த ஒன்று மட்டும் இருந்தால் போதும்.." ரயிலில் செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு.. DSP எச்சரிக்கை

x

ரயிலில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக காவல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடுமையாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தொடர்ந்து மாணவர்களை கண்காணித்து வருவதாகவும், வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் அளவுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்