"கோடிகளில் பறிமுதல்..." இதுவரை சிக்கியது எவ்வளவு..? - ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்

x

"கோடிகளில் பறிமுதல்..." இதுவரை சிக்கியது எவ்வளவு..? - ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்


#ElectionCommission #LokSabhaElections2024 #RadhakrishnanaIAS #ElectionWithThanthiTV

இதுவரை சுமார் 15 கோடி ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார். இதனிடையே, பறக்கும் படையினரால் 15 கோடியே 2 லட்சம் ரூபாயும், வருமான வரித்துறையினரால் 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்