எழும்பூர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு.. சேரை தூக்கி அடித்து மோதிய வழக்கறிஞர்கள்..

x

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் செந்தில். இவர் தன் சகோதரருடன் சேர்ந்து ... சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற விபத்து வழக்கு ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் விஜயகுமார் என்பவர்... இந்த வழக்கை பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி தன் பக்கம் மாற்றி நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றம் விரைந்த செந்தில், இது குறித்து விஜயகுமாரிடம் கேட்கவே, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாகி இருக்கிறது. தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பான நிலையில், இரு தப்பினரும் நாற்காலி மற்றும் ஹெல்மெட்டுகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், வழக்கறிஞர் விஜயகுமார் உட்பட சிலர் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்