மன்னிப்பு கேட்க சொன்ன வங்கி.. கேட்காமல் கோர்ட்டில் வழக்காடி ஜெயித்த மானஸ்தன்..!

x

கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவியின் தந்தை, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மகளுக்கு கல்விக்கடன் வழங்க வங்கி தாமதம் செய்ததால், வங்கி நிர்வாகத்துக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சுவரொட்டிகளை அகற்றி மன்னிப்பு கோரினால் கல்விக்கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் நிர்பந்திப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், கல்விக்கடன் வழங்கல் பிரச்னையில், வங்கி நிர்வாகத்துக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியதை குற்றமாகக் கருத முடியாது என்று தெரிவித்தது. மேலும் நிபந்தனையைத் தவிர்த்து, தகுதி அடிப்படையில் மனுதாரருக்குக் கடன் வழங்கவும் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்