எடப்பாடியில் உலாவும் மர்மம்.. ``இரவு நேரம் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' - பகீர் எச்சரிக்கை

x

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மர்மவிலங்கு உலாவுவதால், இரவு நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவரது தோட்டத்தில் பசுமாட்டை மர்மவிலங்கு வேட்டையாடி கொன்றது பீதியை ஏற்படுத்தியுள்ளது. விலங்கின் காலடி தடத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்து வரும் நிலையில், சிறுத்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்