சேலத்தில் நள்ளிரவில் அலறி ஓடிய அதிமுகவினர் - ஈபிஎஸ்-ஐ கொதிக்க விட்ட பகீர் சம்பவம்

x

சேலத்தில் நள்ளிரவில் அலறி ஓடிய அதிமுகவினர் - ஈபிஎஸ்-ஐ கொதிக்க விட்ட பகீர் சம்பவம்

நள்ளிரவில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்த அதிமுகவினர் மீது திமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் எடப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஈபிஎஸ் பங்கேற்கும் கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளை நள்ளிரவில் அதிமுகவினர் ஒட்டி வந்துள்ளனர். வீரப்பம்பாளையம் அருகே சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்தபோது

அவ்வழியாக மதுபோதையில் வந்த திமுக பிரமுகர் ஆனந்தன், ஈபிஎஸ் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆனந்தனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், அதிமுகவினர் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார். அதில், 10க்கும் மேற்பட்டோர் ஓடி ஒதுங்கிய நிலையில், கார் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அதிமுக பிரமுகர்கள் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ள ஆனந்தன், சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்