டேங்கர் லாரி தலையில் ஏறியதில் போதை இளைஞர் பரிதாப பலி

x

ஆலச்சம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்... நேற்று இரவு பணி முடிந்த பின்பு மது அருந்தி விட்டு வந்த அவர் பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி செல்லும் சாலை நடுவே கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார்... இந்நிலையில், மேட்டூரில் இருந்து எடப்பாடி நோக்கிச் சென்ற கனரக டேங்கர் லாரி சங்கரின் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்... போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரான அம்மாபேட்டையைச் சேர்ந்த மாதையனைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் விபத்து பதிவான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்