ECR-ல் தோழனை கொன்று புதைத்த 8 நண்பர்கள்.. வெளிவந்த அதிர்ச்சி கதை.. மிரண்ட போலீஸ்

x

ECR-ல் தோழனை கொன்று புதைத்த 8 நண்பர்கள்.. வெளிவந்த அதிர்ச்சி கதை.. மிரண்ட போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, 10 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக, மதுபோதையில் நண்பரை 8 பேர் சேர்ந்து அடித்துக்கொன்று காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தையூர் செங்கண்மால் பகுதியில் பெட்டிக்கடையில் பணியாற்றி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், கடந்த 5 நாட்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு சென்று மறுநாள் பணிக்கு வரவில்லை. அவரது உறவினர்கள் தேடிய நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்தின்பேரில் அப்துல் மஜீத்தின் நண்பர்கள் 8க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அப்துல் மஜீத் நண்பர்களுடன் சேர்ந்து கோமா நகர் காட்டுப்பகுதியில் மது அருந்தியபோது, 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில்,சக நண்பர்கள் 8 பேர் சேர்ந்து அப்துல் மஜீத்தை அடித்துக்கொன்று காட்டுப் பகுதியில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர். அப்துல் மஜீத்தின் உடலை தோண்டி எடுக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டதன்பேரில், திருப்போரூர் வருவாய்த் துறையினர் முன்னிலையில், உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்