நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் கவனத்திற்கு.. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் தரமான அறிவிப்பு

x

நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் கவனத்திற்கு.. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் தரமான அறிவிப்பு

சென்னை புரசைவாக்கம் சந்தாதா சங்க நிதி லிமிடெட் நிறுவனம் மீது 758 பேர் பணமோசடி புகார் அளித்தனர். இதுவரை அந்த நிறுவனம் 53 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளனர். அக்டோபர் 19-ஆம் தேதி, வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ மினி காமகோடி திருமண மண்டபத்தில் மனு மேளா நடத்தவுள்ளதாகவும், தகுந்த ஆவணங்களுடன் புகார் மனுக்களை கொண்டு வரலாம் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்