ரூ.8.75 லட்சம் EB பில்... செல்போனில் வந்த மெசேஜ்... ஷாக்கான சம்சாரி

x

ஒசூர் அருகே விவசாயி ஒருவருக்கு, 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஒசூர் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி வெங்கடேஷ் வீட்டில் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் நிமித்தமாக வெளியே சென்று விடுவது வழக்கம். தமிழ்நாடு அரசு சார்பில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில், பெரும்பாலும் மின்கட்டணம் செலுத்தாமலும், சில மாதங்களில் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மின்வாரியத்தில் இருந்து வெங்கடேசனின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில், 8 லட்சத்து 75 ஆயிரத்து 550 ரூபாய் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்