SI கண்களை உறுத்திய ரூ.37,000 இயர்பட்ஸ்... காரில் வந்தவரிடம் விளையாடிய கை

x

திருப்பூரில் கார் ஓட்டி வந்தவரிடம் இயர்பட்ஸை பறித்ததாக சிறப்பு எஸ்.ஐ. மற்றும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருமுருகன் பூண்டி காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ-மருதப்ப பாண்டியன் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற காரை மடக்கி சோதனையிட்டதில், காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவரிடம் 7,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, காரில் இருந்த பீர்பாட்டில் மற்றும் 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அனுப்பி உள்ளனர். இது தொடர்பான புகாரில், சிறப்பு ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் காவலர் குணசுதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல்கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்