ஃபுல் மப்பில் கண்மண் தெரியாமல் தன் பிரண்டையே அப்படி செய்த நண்பன்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்

x

கடலூரில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் தனது நண்பனையே பீர்பாட்டிலால் தாக்கியுள்ளார். பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் அஜித் மற்றும் கிஷோர். இவர்கள் வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து ஏரி பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் அஜித் மற்றும் கிஷோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அஜித்தை கிஷோர் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். காயம் அடைந்த அஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிஷோருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்