மரண பிடியில் பல உயிர்களை காத்து தமிழகத்தையே கலங்கவிட்ட டிரைவர் - ரூ.5 லட்சம் அறிவித்த முதல்வர்

x

மரண பிடியில் பல உயிர்களை காத்து தமிழகத்தையே கலங்கவிட்ட டிரைவர் - ரூ.5 லட்சம் அறிவித்த முதல்வர்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயிலில் நெஞ்சுவலியால் உயிரிழந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுனரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளி வாகன ஓட்டுநரான சேமலையப்பன், தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது, பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்திய பின்னர் உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தாக குறிப்பிட்டுள்ளார். எனவே, சேமலையப்பன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்