அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

x

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம், அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை அதிகரிக்க உள்ள சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் சிவசங்கர், மகளிருக்கான விடியல் பயண திட்டத்தை, மலைபகுதிகளுக்கும் விரிவு செய்வது குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தினார். புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதையும், பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கும் பணியினையும் விரைவுப்படுத்திட அறிவுறுத்தினார். அவர், மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் இடர்பாடின்றி பயணிக்க ஏதுவாக, பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்