தமிழகத்துக்கு வந்த டபுள் குட்நியூஸ்..!

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு வருகை புரிந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஒசூரில் பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சாமல்பட்டி, அரக்கோணம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் 75 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஒசூர் டூ ஜோலார் பேட்டை ரயில்சேவை திட்டமும் விரைவில் செயல்வடிவம் பெறும் என அவர் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்