திமுகவிற்குள் அந்த 5 சதவீதம் பேர் யார்? சாட்டையை சுழற்றும் உதயநிதி

x

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி மிக மிக முக்கியமானது என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க. ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்படும் தொகுதிப் பார்வையாளர்களை, சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை 95 சதவீதம் பேர் தான் சிறப்பாக செய்துள்ளதாகவும், எஞ்சிய 5 சதவீதம் பேர் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் மாநில உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகுவைத்துவிட்டதாகவும், மாநில உரிமைகளை மீட்க நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வெற்றி அடைந்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி மிக மிக முக்கியமானது -நம் தலைவரின் சாதனைகளை, அவர் கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நமது தலைமைக்கழகம் என்ன சொல்கிறதோ, அந்தப் பணிகளை விரைந்து சிறப்பாகச் செய்து முடிப்போம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்