"உனக்கு நாள் குறிச்சாச்சு..ஆம்ஸ்ட்ராங்கை போல் கொல்வோம்" -வாட்ஸ்அப்பில் தீயாய் பரவிய குலைநடுக்க ஆடியோ

x

மயிலாடுதுறையில் திமுக நிர்வாகிக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் அகமதுஷா. வெளிநாட்டில் தொழிலதிபராக உள்ள இவர், மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள அகமதுஷாவின் அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீச இருப்பதகாவும், தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை போல் அவரை கொலை செய்ய இருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்தான ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து மாவட்ட எஸ்.பியிடம் அகமதுஷா புகாரளித்தார். இதனடிப்படையில், அகமதுஷாவின் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில், சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் சாய் பிரவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த மணிபாரதி என்பவர் பணம் கொடுத்து மிரட்டல் விடுக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், தலைமறைவாக உள்ள மணிபாரதியை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்