சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Diwali

x

சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு விண்ணப்பித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. தங்கள் விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை, நடப்பாண்டில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுதாரர் சங்கம் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்