தீபாவளி போனஸ் - ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கை | Diwali Bonus

x

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் 20 சதவீதம் கருணைத்தொகை வழங்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் 20 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதில், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் 10 சதவீதம் கருணைத் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 20 சதவீத கருணைத் தொகை வழங்க கோரி, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்