அப்பார்ட்மெண்ட் வீட்டில் நடந்த அதிர்ச்சி... பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்

x

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை பிடித்த பொதுமக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள் ஒரு நபர் மதுபோதையில் நுழைந்து திருட முயன்ற போது, அக்கம்பக்கத்தினர் அந்நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்