குறி சொல்ல வந்தவர் செய்த செயல்.. மக்களே உஷார்

x

வேடசந்தூர் அருகே குறிசொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வேல்வார்கோட்டை செட்டியபட்டியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரிடம், கடந்த மாதம் 27-ம் தேதி குடுகுடுப்பைக்காரர் ஒருவர் குறி சொல்லி, பரிகாரம் செய்வதாக‌க் கூறி, 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து வள்ளியம்மாள் அளித்த புகார் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது எரியோடு அருகே அருகே உள்ள செல்லக்குட்டியை சேர்ந்த தங்கம் என்பது தெரிய வந்த‌து. இதையடுத்து, தங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், தங்கச் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்