வீட்டில் காய வைத்திருந்த சேலையை திருடிய நபர்.. "போட்ட பிளான் தா வேற லெவல்" - அதிர்ச்சி சிசிடிவி

x

திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் பகுதியில், கமல் பாய் என்பவரது வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த சேலையை, மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சேலையை திருடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சைக்கிளில் வரும் மர்ம நபர் ஒருவர், வீட்டில் காய வைக்கப்பட்டிருந்த சேலையை, இடுப்பில் சுற்றி மறைத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. சேலை திருடிய நபரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்