திடீரென ஜேசிபியுடன் என்ட்ரி கொடுத்த அதிகாரி -வியாபாரி கண் முன்னே சரிந்த கட்டிடம்

x

நிலக்கோட்டை பூ மார்க்கெட் அருகே, பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் மாகாராஜன் - மகேஷ்வரி தம்பதியினர் உணவகம் நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த வளாகத்தில் கலைஞர் நகரப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய கடைகள் கட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில், முன்னறிவிப்பின்றி திடீரென உணவகத்தை இடிக்க அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்துடன் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் மூலம் அவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய பின்னர் கடை இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்