"அய்யோ வேரோட அழிக்கிறாங்களே" - கதறி அழுத 40 பேர்.. ஹிட்டாட்சி மீது தாக்குதல்.. பதற்றம்.. பரபரப்பு..

x

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரெட்டியார்சத்திரம், தர்மத்துப்பட்டி கோம்பை செல்லும் சாலை பகுதியில் பல வருடங்களாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில் உள்ளது கோயிலுக்கு சொந்தமான நிலம் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் சாலை அமைக்கும் போது சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட வீடுகளையும் அதே போல் விவசாய நிலங்களையும் அழித்து சாலை அமைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியதால் தொடர்ந்து இப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் போராட்டம் நடத்திய அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றி விட்டு 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசினர்... ஒரு விவசாயி மரத்தின் மேல் ஏறிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

மரம் ஒன்று விழுந்து கார் சேதமடைந்தது. ஆத்திரமடைந்த உரிமையாளர் ஹிட்டாச்சி ஆப்ரேட்டருடன் வாக்குவாதம் செய்து ஹிட்டாச்சியைத் தாக்கினார்... இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்