தோட்டத்தின் மோட்டர் அறையில்..ஊரையே அலறவிட்ட பயங்கர சத்தம் - பீதியில் மக்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஊராட்சி தோட்டத்து மோட்டார் அறை மீது மர்ம நபர்கள் வெடிக்கக்கூடிய பொருட்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நிலக்கோட்டை அருகே எததிலோடு ஊராட்சிக்கு சொந்தமான தோட்டத்து மோட்டார் அறை, ஆவாரம்பட்டி அருகே உள்ளது. இங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கு வெடிக்கக்கூடிய பொருளை வீசியுள்ளனர். வெடிச்சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள வீடுகளில் சி.சி.டி.வி கேமரா யாரும் வைத்துள்ளார்களா? அதில் ஏதேனும் பதிவாகியுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் அறையில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா? அல்லது வெங்காய வெடியை விளையாட்டுத்தனமாக இளைஞர்கள் வெடிக்கச் செய்தார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்