ஆசை ஆசையாய் மகனுக்கு ஊட்டிய வடையில் இருந்த பூரான்.. அதிர்ச்சியில் தந்தை

x

திண்டுக்கல் NGO காலனி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேநீர் கடையில், பியூலா என்பவர் வடை வாங்கி, அதை தனது மகனுக்கு ஊட்டிய போது, வடையில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பியூலா மற்றும் அவரின் உறவினர் அஸ்வதி இருவரும் கடை உரிமையாளரிடம், இதை பற்றி கேட்ட போது, கடை உரிமையாளர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியதாகவும், உங்கள் வீட்டில் பூரான் இல்லையா என கேட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பியூலா தனது மகனை திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு, திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் அளித்தார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழு அந்த பேக்கரிக்கு நேரில் சென்று வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதன் குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு, மீதி உள்ளவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்