`துப்பட்டாவால்' உயிருக்கு போராடிய பெண்.. ஓடோடி வந்து மருத்துவர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர் பாலமுருகன்.....இவர் தனது மனைவி மணிமேகலையுடன் பெரியகுளம்-திண்டுக்கல் சாலையில் பரசுராமபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மணிமேகலையின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கியது. இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மணிமேகலை சாலையில் தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிமேகலை உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த கோவையைச் சேர்ந்த மருத்துவர் செல்வராஜ், தனது காரை நிறுத்தச்சொல்லி, உடனடியாக ஓடி வந்து சாலையில் மயங்கிக் கிடந்த மணிமேகலைக்கு முதலுதவி அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவரின் செயல் அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்